பெரியார் தமிழை காட்டுமிராண்டி மொழி என்று சொல்லுவதற்கு என்ன காரணம்

பெரியார் தமிழை காட்டுமிராண்டி மொழி என்று சொல்லுவதற்கு என்ன காரணம்...

தமிழ் மொழியானது ஏன் காட்டுமிராண்டி மொழி என்று சொல்லுகின்றேன்? எதனால் சொல்லுகிறேன் என்று இன்று கோபித்துக் கொள்ளும் யோக்கியர்கள் ஒருவர் கூட சிந்தித்துப் பேசுவதில்லை. வாய் இருக்கிறது எதையாவது பேசி வயிறு வளர்ப்போம் என்று நினைப்பது.

அறிவையோ, மானத்தையோ, ஒழுக்கத்தைப் பற்றிக் கூட சிந்திக்காமல் பேசிவருகிறார்கள். இப்படிப்பட்ட இவர்கள் போக்குப்படியே சிந்தித்தாலும் தமிழ் மொழி மூவாயிரம், நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட மொழி என்பதை தமிழின் பெருமைக்கு ஒரு சாதனையாய்ச் சொல்லிப் பேசுகிறார்கள்.

நானும் தமிழ் காட்டுமிராண்டி மொழி என்று அதைத்தானே முக்கிய காரணமாய்ச் சொல்லு கின்றேன் (துணிச்சலாக அய்யா, சொல்லுகிறார். அவர் ஒன்றும் நகாஸ் செய்யவில்லை) அன்று இருந்த மக்களின் மனநிலை என்ன? அவன் சிவனாகட்டும், அகஸ்தியனாகட்டும், பாமினியா கட்டும் மற்றும் எவன்தான் ஆகட்டும் இவன்களைப் பற்றித் தெரிந்து கொள்ள உனக்குப் புத்தி இல்லாவிட்டால், நீ தமிழைப் பற்றிப் பேசும் தகுதி உடையவனாவாயா? பிரிமிட்டிங் என்றால் அதன் தத்துவம் என்ன? பார்பேரியன், பார்பனிலும் என்றால் அதன் பொருள் என்ன? 3,000, 4,000ம் ஆண்டுகளுக்கு முன் என்பது பிரிமிட்டிவ், பார்பேரியன், பார்பனிலும் என்பதற்கு அக்கால மக்கள் அறிவு, அக்கால மக்கள் நிலை முதலியவை என்பதற்கு என்ன பேதம் கற்பிக்க முடியும்?

இன்று, நமது வாழ்வு கடவுள், மதம், மொழி, இலட்சிம் என்பன போன்றவை உண்மையான காட்டுமிராண்டித் தனம் பொருந்தியவை தவிர, வேறு எதில் பற்று கொண்டிருக்கிறோம். வேறு எதில் குரங்கு பிடியாய் பிடித்துக் கொண்டிருக்கிறோம் என்று சொல்லுகிறார்.

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்